சென்ற வாரம் ஞாயிற்று கிழமை பெங்களூரில் , இருந்து கோவைக்கு மாணவர்களின்
உண்ணாவிரதத்தில் ஒரு நாள் பங்கெடுக்க வந்தேன் .. அங்கு பாரதியார்
பல்கலைகழக மாணவர்கள் போராட்டம் செய்து கொண்டிருந்தனர். அங்கு அவர்களிடம்
பேசியபோது கிடைத்த சில தகவல்கள் ..
...
நான் காலை 7 மணிக்கு சென்றேன் .அன்று முழுவதும் கடும் வெயில் .. நிழலுக்கு
ஒதுங்க கூட இடம் இல்லை ..மதிய கடும் வெயில் ஒரு மாணவ , மாணவியர் கூட அந்த
இடத்தை விட்டு நகரவில்லை ..
அங்கு போராடிய பெண்களின் நிலைமையை கேக்கும் போது என்னால் கண்ணீரை கட்டுபடுத்தமுடியவில்லை .. ஆம் அவர்கள் போராட ஆரம்பித்த இரண்டு நாளில் கல்லூரியை மூடிவிட்டார்கள் .. தங்கும் விடுதியை கூட .. ஆனாலும் ஒரு மாணவியர் கூட வீடு செல்லவில்லை .. பெற்றோர்கள் வீடு வர சொல்லி நிர்பந்தித்தும் செல்லவில்லை .. அனைவரும் தெருவில் படுத்து உறங்குகின்றனர் .. இதை விட கொடுமையானது பாத்ரூம் , toilet போவதற்கு படும் கஷ்டம் .. இப்படி ஒன்னு , ரெண்டு நாள் இல்ல .. கடந்த பத்து நாட்களாக இது தான் நிலை ..
மாணவர்கள் எவ்வளவு சொல்லியும் மாணவியர்கள் யாரும் வீடு செல்லவில்லை .. அவர்களின் மன உறுதியை பார்க்கும் பொழுது , ஈழம் வென்று விடுவோம் என்ற நம்பிக்கை மேலும் உறுதியானது ..
இது நான் கண்ட ஒரு காட்சி ... இன்னும் எத்தனை மாணவியர்கள் தமிழ்நாட்டில் ..
இப் பெண்களை பாராட்ட கூட வேண்டாம் கேலி செய்யாமல் இருக்கலாம் அல்லவா .. கீழுள்ள புகைப்படத்தில் மாணவியர்கள் ரயில் மறியல் செய்கின்றனர் .. அதை எவ்வாறு கேலி comment செய்திருக்கிறார்கள் என்று பாருங்கள் .. என்ன செய்வது இவர்களை ..
நெஞ்சுபொறுக்குதில்லையே இந்த மதி கெட்ட மாந்த்தரை நினைத்து ..
No comments:
Post a Comment