ரமாவிற்கு முதல் பிரசவம். ஆண் குழந்தை என்றதுமே எல்லோருக்குமே பளிச் சிரிப்புதான். பிரசவ சேதி சொல்ல வந்த ஆயா கூட ஆண் பிள்ளை என்பதால் கொசுராய் கொஞ்சம் டிப்ஸ் வாங்கிக் கொண்டாள். ஆனால் அந்தப் பிள்ளையைப் பெற்ற தாய் மட்டும் படிப்படியாக சோகமாகிக் கொண்டே போய், திடீரென்று ஒரு நாள் `எனக்கு வாழவே பிடிக்கல'' என்று குமுறி அழ, எல்லோருக்கும் பகீர் என்றானது. அன்பான கணவன், பிக்கல் பிடுங்கல் தராத புகுந்தவீடு, மகளுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் பெற்றோர் எல்லாம் இருந்தும் ஏன் இந்தப் பெண் இப்படி... எத்தனையோ கேள்விகளுடன் ரமாவை மனநல சிகிச்சைக்குக் கொண்டு போனால் பிரசவ கால டிப்ரெஷஜன் என்றார் டாக்டர். ``டிப்ரெஸ், ஆகுற அளவிற்கு என்ன மனக் கஷ்டம்' என்று எல்லோரும் ஆட்சேபிக்க மருத்துவர் ஒரே வார்த்தையாய் சொன்னது, ஆண் குழந்தை பிறந்த தாய்மார்களுக்கு இப்படி வர்றது சகஜம் தான். ஹார்மோன் பிரச்னையினால்தான் இப்படி. போகப் போக சரியாப் போயிடும்?
ஆண் குழந்தையைப் பெற்றெடுப்பதற்கும் தாயின் மனநலத்திற்கும் என்ன சம்பந்தம்? என்று நீங்கள் யோசிக்க ஆரம்பித்துவிட்டால், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கதைகள் வேறு சில உள்ளன. உஷாவும் ஒரு ஆண் குழந்தையின் தாய். ஏற்கெனவே ஒரு மகள் உண்டு. மகனுக்கு வயதாக ஆக உஷாவின் டென்ஷன் அதிகமாகிக் கொண்டே போனது. `என் மகளை வளர்க்க நான் இவ்வளவு கஷ்டம் படலப்பா. அவளே தன் வேலைகளைப் பார்த்துப்பா, தானா குளிச்சு ஸ்கூலுக்குக் கிளம்பி, தன் திங்ஸை பத்திரமா எடுத்து வச்சி, ஹோம் ஓர்க் செய்து எனக்கு எந்தத் தொந்தரவும் தந்ததே இல்லை. ஆனா இந்தப் பையன்! இவனை வளர்க்குறதுக்குள்ள என் பிராணனே போயிடும் போலிருக்கே. எல்லாத்துக்கும் அம்மா அம்மாதான். எட்டு வயசாச்சு, இன்னும் நான் தான் எழுப்பி, பல் தேய்ச்சி, குளிப்பாட்டி, சாப்பாடு ஊட்டிவிட்டு, யூனிஃபார்ம் மாட்டி ஸ்கூலில் கொண்டு போய் விடணும். சாயந்திரம் அவனை ஹோம் ஒர்க் செய்ய வெக்குறதுக்குள்ள என் தொண்டையே வத்திப் போயிடுது. சதா விளையாட்டு, வீடியோ கேம்ஸ்னு லூட்டிதான். கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை. இவனை பெரியவனா வளர்த்து விடுறதுக்குள்ள என் பாடு திண்டாட்டம்தான்' என்று பார்ப்பவர் எல்லோரிடமும் புலம்பித் தள்ளுவாள். அவள் மட்டுமில்லை. அவளிடம் பேசும் அனைத்துத் தாய்மார்களின் ஒட்டுமொத்த கோரஸ் புலம்பலே இதுதான்.
இவர்கள் நிலைதான் இது என்றால் ஒன்பதாவது, பத்தாவது படிக்கும் மாணவர்களின் தாய்க்குலங்கள் படும்பாடு இதைவிட ரொம்பவே பாவம்! வர வர அவனுக்கு கோபம் ஓவரா வருது. கைய நீட்டிப் பேசுற பழக்கம் வேற புதுசா!
முன்னே எல்லாம் பெரியவங்கனு பயபக்தியா இருந்தான் பையன். இப்ப என்னடான்னா `மொக்கை போடாதீங்க!னு மூஞ்சில அடிச்சா மாதிரி சொல்லிடுறான். அடிக்கடி மூட் அவுட் ஆயிடுறான். வீட்டுக்குச் சொந்தக்காரங்க வந்தாக்கூட முகம் கொடுத்துப் பேசறதில்லை. பக்கத்து வீட்டுப் பொண்ணோட ரொம்பப் பேசுறானேன்னு கவலைப்பட்டேன். கடைசியில பார்த்த `ஆண்ட்டி ஆண்ட்டி'னு அந்தப் பொண்ணோட அம்மாகிட்ட அப்படி ஒரு வழிசல்... ஏன்தான் இப்படி ஒரு பிள்ளையை பெத்தோம்னு தோணுதுப்பா!
அம்மாக்களின் அவஸ்தை இது என்றால், ஆண்களால் கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் படும்பாடு இதைவிட பெரிய கூத்து. அன்பா இருக்கான்னு நானும் மயங்கி போயிட்டேன்ப்பா. ஆனா வரவர அவன் குணமே சரியில்ல. நம்மூரு வெயிலுக்கு திக்காக டிரஸ் பண்ணிக்கச் சொல்றான். கொஞ்சம் `மெல்லிய காற்றோட்டமாக டிரஸ் பண்ணிக்கிட்டா யாரு பார்க்க'ன்னு கத்தறான். என் கூடப் பேசும்போதே போற வர்றவளை லுக் விடுற டைப். `என்னை சந்தேகப்படறானே ராஸ்கல்' என்று புலம்பும் பெண்கள் ஒரு பக்கம் என்றால், ``கல்யாணத்துக்கு முன்னாடி இதெல்லாம் வேண்டாம்னு சொன்னா விடமாட்டேன்றான்பா. தொடாம காதலிச்சா அது காதலே இல்லனுறான். இவனை எப்படி ஹாண்டில் பண்ணுறதுனே புரியல்லே!'' என்று புகார் சொல்லும் பெண்களும் இருக்கிறார்கள்.
இதற்கு அடுத்த கட்டமாய்; கல்யாணமான புதுசுல அவ்வளவு ஸ்வீட்டா இருந்தார். நான் கூட ஆஹா இவரை மாதிரி ஒருத்தரை அடைஞ்சது நான் எந்த ஜென்மத்துலயோ பண்ண புண்ணியம்னு எல்லாம் ஓவர் சென்டிமென்டலா உருகி தொலைச்சிட்டேன். போகப் போக ஐயாவோட சாயம் வெளுக்குது! இவருக்கு சுய அறிவுனு ஒண்ணே கிடையாது. அவங்க அம்மா என்ன ஓதி அனுப்பினாலும் அதையே பிடிச்சிக்கிட்டு அழிச்சாட்டியும் பண்ணி உயிரை எடுக்கிறார். காலைலேர்ந்து வீடு, ஆஃபீசுனு மாடா உழைக்கிறேனே. எனக்கு ஒரு நாள் கூட உதவி செய்யுறதில்லை. அட உதவலைனாலும் உபத்திரவம் பண்ணாம இருக்கலாமே. ஊகூம்! சதா ஏய் அதை எடு, இதை எடுன்னு என்னை ஏசிக்கிட்டே இருக்கிறது. எவன் கட்டுன பொண்டாட்டிக்கோ கரிசனம் கொட்டி ஹெல்ப் பண்ண ஓடுவார், கட்டுன பொண்டாட்டிதான் ஒண்டி ஆளா எவ்வளவு அல்லல்பட்டாலும் சட்டையே பண்ணுறதில்ல! ஏன்தான் இந்த ஆம்பிளைங்க இப்படி இருக்காங்களோ!'' என்று கணவர்களைப் பற்றி குறைபடும் பெண்கள் ஏராளமானோர். அநேகமாய் எல்லோர் வீட்டிலும் `இந்த மனுஷனைக் கட்டிக்கிட்டு நான்பட்ட பாட்டைப் பத்தி சொன்னா ஒரு சினிமா படமே எடுக்கலாம். என்னை கொஞ்சமா படுத்தினார்' என்று புகார் சொல்லும் பாட்டிகள் உள்ளார்கள். அதையும் தவிர என்னை மாதிரி மருத்துவர்களைச் சந்திக்கும்போது வேறொரு பிரச்னையையும் பகிர்ந்துகொள்கிறார்கள். ``அந்த மனுஷனுக்கு 70 வயசு ஆகுது. இன்னும் அடங்கமாட்டேன்றாரேம்மா. பேரன், பேத்தி எடுத்தாச்சு. எனக்கென்ன இளமை ஊஞ்சலா ஆடுது? ரொம்ப தொந்தரவு பண்ணுறாரும்மா'' என்று நொந்து கொள்கிறார்கள் மூத்த சுமங்கலிகள்.
இதுதவிர இடி மன்னர்கள், பெண்கள் என்றாலே முகத்தைப் பார்த்துப் பேசத் தெரியாத பால்குடி மாறாத பராக்கிரமசாலிகள், உடன் வேலைபார்க்கும் பெண்களைச் சீண்டுபவர்கள் என்று தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை ஆண்களைச் சமாளிக்கவே செலவிடும் பெண்களுக்கு `இந்த ஆண்களை ஹாண்டில் பண்ணுவது எப்படி?' என்கிற சாஸ்திரம் மட்டும் கிடைத்தால் எவ்வளவு உபயோகமாக இருக்கும்?
இந்த முக்கியமான சாஸ்திரத்தைக் கற்றுத்தர நாங்கள் ரெடி! கற்றுக்கொள்ள நீங்கள் ரெடி என்றால், அடுத்த இதழில் இருந்து உங்களுக்கே உங்களுக்கென்று ஆரம்பமாகிறது ஆண்களை இயக்கும் அரிய சாஸ்திரம்!
ஆண் குழந்தையைப் பெற்றெடுப்பதற்கும் தாயின் மனநலத்திற்கும் என்ன சம்பந்தம்? என்று நீங்கள் யோசிக்க ஆரம்பித்துவிட்டால், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கதைகள் வேறு சில உள்ளன. உஷாவும் ஒரு ஆண் குழந்தையின் தாய். ஏற்கெனவே ஒரு மகள் உண்டு. மகனுக்கு வயதாக ஆக உஷாவின் டென்ஷன் அதிகமாகிக் கொண்டே போனது. `என் மகளை வளர்க்க நான் இவ்வளவு கஷ்டம் படலப்பா. அவளே தன் வேலைகளைப் பார்த்துப்பா, தானா குளிச்சு ஸ்கூலுக்குக் கிளம்பி, தன் திங்ஸை பத்திரமா எடுத்து வச்சி, ஹோம் ஓர்க் செய்து எனக்கு எந்தத் தொந்தரவும் தந்ததே இல்லை. ஆனா இந்தப் பையன்! இவனை வளர்க்குறதுக்குள்ள என் பிராணனே போயிடும் போலிருக்கே. எல்லாத்துக்கும் அம்மா அம்மாதான். எட்டு வயசாச்சு, இன்னும் நான் தான் எழுப்பி, பல் தேய்ச்சி, குளிப்பாட்டி, சாப்பாடு ஊட்டிவிட்டு, யூனிஃபார்ம் மாட்டி ஸ்கூலில் கொண்டு போய் விடணும். சாயந்திரம் அவனை ஹோம் ஒர்க் செய்ய வெக்குறதுக்குள்ள என் தொண்டையே வத்திப் போயிடுது. சதா விளையாட்டு, வீடியோ கேம்ஸ்னு லூட்டிதான். கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை. இவனை பெரியவனா வளர்த்து விடுறதுக்குள்ள என் பாடு திண்டாட்டம்தான்' என்று பார்ப்பவர் எல்லோரிடமும் புலம்பித் தள்ளுவாள். அவள் மட்டுமில்லை. அவளிடம் பேசும் அனைத்துத் தாய்மார்களின் ஒட்டுமொத்த கோரஸ் புலம்பலே இதுதான்.
இவர்கள் நிலைதான் இது என்றால் ஒன்பதாவது, பத்தாவது படிக்கும் மாணவர்களின் தாய்க்குலங்கள் படும்பாடு இதைவிட ரொம்பவே பாவம்! வர வர அவனுக்கு கோபம் ஓவரா வருது. கைய நீட்டிப் பேசுற பழக்கம் வேற புதுசா!
முன்னே எல்லாம் பெரியவங்கனு பயபக்தியா இருந்தான் பையன். இப்ப என்னடான்னா `மொக்கை போடாதீங்க!னு மூஞ்சில அடிச்சா மாதிரி சொல்லிடுறான். அடிக்கடி மூட் அவுட் ஆயிடுறான். வீட்டுக்குச் சொந்தக்காரங்க வந்தாக்கூட முகம் கொடுத்துப் பேசறதில்லை. பக்கத்து வீட்டுப் பொண்ணோட ரொம்பப் பேசுறானேன்னு கவலைப்பட்டேன். கடைசியில பார்த்த `ஆண்ட்டி ஆண்ட்டி'னு அந்தப் பொண்ணோட அம்மாகிட்ட அப்படி ஒரு வழிசல்... ஏன்தான் இப்படி ஒரு பிள்ளையை பெத்தோம்னு தோணுதுப்பா!
அம்மாக்களின் அவஸ்தை இது என்றால், ஆண்களால் கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் படும்பாடு இதைவிட பெரிய கூத்து. அன்பா இருக்கான்னு நானும் மயங்கி போயிட்டேன்ப்பா. ஆனா வரவர அவன் குணமே சரியில்ல. நம்மூரு வெயிலுக்கு திக்காக டிரஸ் பண்ணிக்கச் சொல்றான். கொஞ்சம் `மெல்லிய காற்றோட்டமாக டிரஸ் பண்ணிக்கிட்டா யாரு பார்க்க'ன்னு கத்தறான். என் கூடப் பேசும்போதே போற வர்றவளை லுக் விடுற டைப். `என்னை சந்தேகப்படறானே ராஸ்கல்' என்று புலம்பும் பெண்கள் ஒரு பக்கம் என்றால், ``கல்யாணத்துக்கு முன்னாடி இதெல்லாம் வேண்டாம்னு சொன்னா விடமாட்டேன்றான்பா. தொடாம காதலிச்சா அது காதலே இல்லனுறான். இவனை எப்படி ஹாண்டில் பண்ணுறதுனே புரியல்லே!'' என்று புகார் சொல்லும் பெண்களும் இருக்கிறார்கள்.
இதற்கு அடுத்த கட்டமாய்; கல்யாணமான புதுசுல அவ்வளவு ஸ்வீட்டா இருந்தார். நான் கூட ஆஹா இவரை மாதிரி ஒருத்தரை அடைஞ்சது நான் எந்த ஜென்மத்துலயோ பண்ண புண்ணியம்னு எல்லாம் ஓவர் சென்டிமென்டலா உருகி தொலைச்சிட்டேன். போகப் போக ஐயாவோட சாயம் வெளுக்குது! இவருக்கு சுய அறிவுனு ஒண்ணே கிடையாது. அவங்க அம்மா என்ன ஓதி அனுப்பினாலும் அதையே பிடிச்சிக்கிட்டு அழிச்சாட்டியும் பண்ணி உயிரை எடுக்கிறார். காலைலேர்ந்து வீடு, ஆஃபீசுனு மாடா உழைக்கிறேனே. எனக்கு ஒரு நாள் கூட உதவி செய்யுறதில்லை. அட உதவலைனாலும் உபத்திரவம் பண்ணாம இருக்கலாமே. ஊகூம்! சதா ஏய் அதை எடு, இதை எடுன்னு என்னை ஏசிக்கிட்டே இருக்கிறது. எவன் கட்டுன பொண்டாட்டிக்கோ கரிசனம் கொட்டி ஹெல்ப் பண்ண ஓடுவார், கட்டுன பொண்டாட்டிதான் ஒண்டி ஆளா எவ்வளவு அல்லல்பட்டாலும் சட்டையே பண்ணுறதில்ல! ஏன்தான் இந்த ஆம்பிளைங்க இப்படி இருக்காங்களோ!'' என்று கணவர்களைப் பற்றி குறைபடும் பெண்கள் ஏராளமானோர். அநேகமாய் எல்லோர் வீட்டிலும் `இந்த மனுஷனைக் கட்டிக்கிட்டு நான்பட்ட பாட்டைப் பத்தி சொன்னா ஒரு சினிமா படமே எடுக்கலாம். என்னை கொஞ்சமா படுத்தினார்' என்று புகார் சொல்லும் பாட்டிகள் உள்ளார்கள். அதையும் தவிர என்னை மாதிரி மருத்துவர்களைச் சந்திக்கும்போது வேறொரு பிரச்னையையும் பகிர்ந்துகொள்கிறார்கள். ``அந்த மனுஷனுக்கு 70 வயசு ஆகுது. இன்னும் அடங்கமாட்டேன்றாரேம்மா. பேரன், பேத்தி எடுத்தாச்சு. எனக்கென்ன இளமை ஊஞ்சலா ஆடுது? ரொம்ப தொந்தரவு பண்ணுறாரும்மா'' என்று நொந்து கொள்கிறார்கள் மூத்த சுமங்கலிகள்.
இதுதவிர இடி மன்னர்கள், பெண்கள் என்றாலே முகத்தைப் பார்த்துப் பேசத் தெரியாத பால்குடி மாறாத பராக்கிரமசாலிகள், உடன் வேலைபார்க்கும் பெண்களைச் சீண்டுபவர்கள் என்று தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை ஆண்களைச் சமாளிக்கவே செலவிடும் பெண்களுக்கு `இந்த ஆண்களை ஹாண்டில் பண்ணுவது எப்படி?' என்கிற சாஸ்திரம் மட்டும் கிடைத்தால் எவ்வளவு உபயோகமாக இருக்கும்?
இந்த முக்கியமான சாஸ்திரத்தைக் கற்றுத்தர நாங்கள் ரெடி! கற்றுக்கொள்ள நீங்கள் ரெடி என்றால், அடுத்த இதழில் இருந்து உங்களுக்கே உங்களுக்கென்று ஆரம்பமாகிறது ஆண்களை இயக்கும் அரிய சாஸ்திரம்!
No comments:
Post a Comment