இந்த ஆண்கள் ஏன் வித்தியாசமாகிப் போனார்கள்? அவர்களும் பெண்களைப் போலவே இருந்திருந்தால் உலகில் எந்த ஆண்_பெண் பிரச்னைகளுமே வந்திருக்காதே! என்று நீங்கள் யோசிப்பது நியாயமானதுதான். ஆனால் என்ன செய்வது? இயற்கையின் லாஜிக் வேறாக இருந்ததே.
இயற்கையில் பெண் என்பவள் ரொம்ப பெரிய பொக்கிஷம். ஏன் தெரியுமா? பெண்ணிடம் தான் ஜனத்தொகையைப் பெருக்கும் பெரும் ஆற்றல் இருக்கிறது. ஜனத்தொகையை மட்டுமே பெருக்கிக் கொண்டு இருப்பதா ஒரு பெண்ணின் வேலை? பெண் என்ன பிள்ளை பெறுகிற யந்திரமா? என்று நீங்கள் ஆட்சேபித்தால், வெயிட் வெயிட். நாமெல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நூற்றாண்டில் வேண்டுமானால் மனித ஜனத்தொகை ஓவராய் இருப்பதினால், தாமத திருமணம், கருத்தடைச் சாதனம், பிள்ளை பிறப்பை சுயமாகக் குறைத்துக் கொள்ளும் போக்கு, கருக்கலைப்பு முறைகள், குடும்பக் கட்டுப்பாட்டு திட்டம் என்று நாம் தீவிர ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறோம். ஆனால் மனிதர்கள் தோன்றிய மூன்று மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னிருந்த காலத்தில் மிக மிகக் குறைந்த எண்ணிக்கையில் வாழ்ந்த ஒரு சிறுபான்மை உயிரினம் மனிதர்கள் மட்டுமே. அந்த கால கட்ட ஜீவனத்தில் பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதம் தான் அதிகம் என்பதால், குழந்தைகளைப் பெற்றுத் தரவல்ல பெண் மிகப் பெரிய பொக்கிஷமாகவே கருதப்பட்டாள்.
பெண்கள் பாதுகாப்பாய் சவுக்கியமாய் இல்லை என்றால் ஒட்டுமொத்த உயிரினமே அழிந்து போய்விடுமே என்றுதான், பெண்களைப் பாதுகாக்கவென்றே இயற்கை ஆண்களைப் படைத்தது. உங்களுக்கு ஒன்று தெரியுமா? உலகத்தில் உயிர்கள் முதல் முதலில் தோன்றிய காலத்தில் ஆண் என்ற பாலினமே இருக்கவில்லை! எல்லா உயிர்களுமே ஆரம்பத்தில் பெண்பாலாக மட்டுமே இருந்தன. அவ்வளவு ஏன்? இன்று வரை பூமியில் மிக அதிக எண்ணிக்கையில் வாழும் வைரஸ், பாக்டீரியா, ஆல்கே, அமீபா மாதிரியான நுண்ணுயிர்களில் ஆண் பால் என்ற இனமே இல்லை... எல்லாமே ஒன்லி விமென்! ஏன் என்றால் இந்த உயிர்களுக்கு ஆணின் தேவை இல்லை! எந்தெந்த உயிர்களில் எல்லாம் பிற கிருமிகள் அல்லது வேறு உயிரினம் தாக்கும் ஆபத்து அதிகமாக உள்ளதோ அந்தந்த உயிர்களில் மட்டும் தான் ஆண் என்கிற ஒரு தனி பாலினம் இருக்கிறது.
மனிதர்களிலும் ஆணின் கடமை, பெண்ணைப் பாதுகாப்பதுதான். அதனால் தான் எரியும் விமானம், மூழ்கும் டைடானிக் கப்பல் ஆகிய செயற்கை விபத்துக்கள் ஆகட்டும், சுனாமி, நிலநடுக்கம், புயல் வெள்ளம் என்ற இயற்கைச் சீற்றங்கள் ஆகட்டும்... எங்கு ஆபத்து நேர்ந்தாலும் முதலில் காப்பாற்றப்படுவது பெண்ணினம் தான்.
இந்தக் காலத்தில் பெண்களைப் பாதுகாப்பது அவ்வளவொன்றும் கஷ்டமில்லை. சமுதாயம், சட்டம், போலீஸ், மகளிர் ஆணையம் என்று பல கட்டமைப்புகள் இருப்பதால் பெண்களுக்கு நிறையவே பாதுகாப்பு உள்ளது. ஆனால் மனிதர்கள் தோன்றிய காலத்தில், இந்த ஏற்பாடுகள் இருக்கவில்லை. பிற மிருகம் தாக்கிவிடும் அபாயம் எந்நேரமும் இருந்த அந்த ஆரண்ய காண்ட வாழ்க்கை முறையில் ஒரு பெண்ணைப் பாதுகாக்க வேண்டும் என்றால் சும்மா சாதாரண நபரால் அது முடியாதே. அதுவும் ஆயுதங்கள் எதுவும் கண்டுபிடிக்காத காலத்தில் பெண்ணைக் காப்பாற்ற வேண்டுமென்றால், அதிக பட்ச வீரமும், அதைவிட அதிகமான தேகபலமும் கொண்டவனால் மட்டும்தான் முடியும்.
இந்த அதிகபட்ச வீரமும் தேக பலமும் தானாய் தோன்றிவிடாதே! அதை உருவாக்க டெஸ்டோஸ்டீரான் என்கிற தேகபலம் கூட்டும் ஹார்மோன் தேவைப்படுமே. இன்று ஒலிம்பிக்ஸ் மாதிரியான போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்கள் ஜெயித்தே ஆகவேண்டும் என்ற வேட்கையில் டெஸ்டோஸ்டீரான் மாதிரியான ஹார்மோன்களை ஊசி, மாத்திரை என்று செயற்கையாக உடம்பில் ஏற்றி, திடகாத்திரமான உடலைப் பெற முயல்கிறார்கள். அந்தக் கால காட்டு வாழ்க்கையில் ஆண் இப்படிச் செய்யவெல்லாம் வாய்ப்பே இல்லை. அவனே சுயமாகப் போராடி, தன் உடம்பை வளைத்து நிஜ டெஸ்டோஸ்டீரானை சுரந்தாக வேண்டும். அப்போதுதான் ஆபத்துகளுடன் மோதி, அயராமல் தன் துணைவியையும், பிள்ளைகளையும் அவன் காப்பாற்ற முடியும்.
ஆண்கள் இப்படி டெஸ்டோஸ்டீரான் உற்பத்தியை அதிகரிக்கும் நிர்பந்தத்திற்கு தள்ளப்பட, பெண்கள் தங்களது பாதுகாப்பு கருதி, அதிக பட்ச டெஸ்டோடீரான் சுரத்தலை வெளிப்படுத்தும் ஆண்களோடு மட்டுமே கூட விரும்பினார்கள். அதற்கும் ஒரு காரணம் இருந்தது. இவள் பாட்டுக்கு ஒரு சோப்ளாங்கிக்கு பாவம் பார்த்து அவனோடு கூடி, பிள்ளை பெற்றாள் என்று வையுங்களேன். ஆபத்து காலத்தில் சோப்ளாங்கி, தைரியமாகப் போய் போராடி, மனைவி மக்களைக் காப்பாற்றிடாமல், பயந்து போய் எல்லாப் பொறுப்பையும் மனைவியின் தலையில் கட்டிவிட்டு எங்கோ ஓடி ஒளிந்துகொண்டால் பிறகு அவளுக்குத் தானே எல்லா கஷ்டமும்? இந்த துர்பாக்கியம் எல்லாம் நேர்ந்துவிடக் கூடாதென்று தான் பெண்கள் எல்லோரும் மிக உஷாராக போதுமான டெஸ்டோஸ்டீரான் சுரத்தலை நிரூபிக்கும் ஆண்களோடு மட்டுமே கூட முயல்கிறார்கள்.
அவதார புருஷன் ராமனாகவே இருந்தாலும் வில்லை வளைத்தால் தான் சீதை என்று கட்டளைவிதித்தது கூட ராமனின் டெஸ்டோஸ்டீரான் அளவைச் சோதிக்கும் ஒரு நேரடி முயற்சியே! ஆக அந்தக் காலப் பெண்கள் எல்லாம் பார்த்துப் பார்த்து அதிக பட்ச டெஸ்டோஸ்டீரான் சுரந்த ஆண்களை மட்டும் ஜலித்து எடுத்து உறவுகொண்டதால், ஆண்வர்க்கம் போகப் போக அதிக அளவு டெஸ்டோஸ்டீரான் கொண்டவர்களாக மாறினார்கள். ஒரு நாள் இரண்டு நாட்களுக்கு அல்ல, முழுவதாய் மூன்று மில்லியன் ஆண்டுகளுக்கு ஆண்கள் இப்படி அதிக டெஸ்டோஸ்டீரான், இன்னும் அதிக டெஸ்டோஸ்டீரான் என்று சுரந்துகொண்டே போனதில், ஆண்கள் அதிக தசைப் புடைப்பு, அதிக ரத்த அணுக்கள், அதிக நுரையீரல் கொள் அளவு, அதிக வலி தாங்கும் தன்மை, அஞ்சாத நெஞ்சம் என்று பல அனுகூலங்களைப் பெற்றார்கள்.
இந்த அதிகபட்ச டெஸ்டோஸ்டீரான் ஆணின் உடம்பை பல விதங்களில் மாற்றி அமைத்ததைப் போலவே அவனது மனதையும் மாற்றியது. அடிப்படை பெண் வடிவ மூளையில் மொழி மையம் பெரிது. கை ஜாடை, முக அசைவு போன்றவற்றை அறியும் மையங்கள் அதிகம். ஆணுக்கோ வேட்டையாடும் திறனை அதிகரிக்கும் ஆற்றல்கள் அதிகம் தேவை. ஓடும் இரையைத் துல்லியமாய் தேடிப் பிடித்து, அதன் வேகம், தன்னை விடவும் எவ்வளவு தூரம் என்பதையும் கணித்துக் குறிதவறாமல் ஆயுதத்தை எறிந்து, வேட்டையில் வெற்றி பெறத் தேவையான இந்த திறமையைத் தான் visuo spatial ஆற்றல் என்போம். அதாவது கண், கை அசைவு, தூரம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து செயல்படும் திறன்.
இந்தத் திறனெல்லாம் மனித இனத்திற்கு ஆரம்பத்திலிருந்தே இருக்கவில்லை. மனிதர்கள் பூச்சி உண்ணும் தாவர பட்சிணி வகையைச் சேர்ந்தவர்கள். பெரும் பனி யுகத்தில் கஷ்ட ஜீவனத்தை வெல்ல வேறு வழியில்லாமல் மாமிச பட்சிணி வாழ்க்கை முறைக்கு மாறியவர்கள். அடிப்படையில் பூச்சி தின்னிகள் என்பதால் வேட்டைக்கு உதவாத ஒரு சாதா மூளைதான் ஆரம்பகால மனிதர்களுக்கு இருந்தது. மனித மரபணுக்கள் துரிதமாக செயல்பட்டு, மனித இனத்தைக் காப்பாற்ற புதிதாய் ஒரு சூப்பர் வேட்டை மூளையை உருவாக்க வேண்டியிருந்தது.
ஆனால் தாவர பட்சிணி மூளையை, மாமிச பட்சிணி மூளை ஆக்குவது அவ்வளவு சுலபமில்லையே! மூளையின் அளவு கொஞ்சம்தான். அதை ரொம்பவும் பெரிதாக்க முடியாது. அப்புறம் பிரசவத்தின்போது சிசுவின் தலை, இடை எலும்பிலேயே மாட்டிக் கொள்ளுமே! தலையும் பெரிதாக வேண்டும், பெண்ணின் மெல்லிடையை விட்டுப் பிரசவித்து வெளியேறத் தோதாகவும் இருக்க வேண்டும் என்றால் அது எப்படி சாத்தியமாகும்? அதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தன மரபணுக்கள். தலையைக் கொஞ்சம் பெரிதாக்கி, இடையைக் கொஞ்சம் அகலமாக்கி, மூளையில் இருந்த அநாவசிய மையங்களைக் காலிசெய்து வெற்றிடங்களை வாழ்க்கைக்குத் தேவையான வித்தைகளை வைத்து நிரப்பின.
அதனால் ஆண்கள் முக்கால்வாசி மொழி மையத்தை இழந்தார்கள். கூடவே கை ஜாடை, முக ஜாடை அறியும் மையங்களும் காலியாகின. எப்படியும் ஒரு ஆணுக்கு இந்தச் செயல்பாடுகள் தேவைப்படவில்லை. ஒரு நல்ல வேட்டுவன் மௌனமகத்தானே இருந்தாக வேண்டும். பேசிக்கொண்டே இருந்தால் மிருகமல்லவா அவனை வேட்டையாடிவிடும்! கை இருக்கிறதே என்று இவன் விஸ்தாரமாய் ஜாடை செய்து நண்பர்களோடு உரையாடினாலோ, அசைவைக் கவனித்ததுமே மிருகங்கள் உஷாராகி ஓடிவிடும். அதோடு, `நான் பாவமில்லையா! என்னை விட்டுடேன்! என்று ஏதாவது மிருகம் பரிதாபமாய் அவனைப் பார்த்தால், `போனா போகட்டும், இன்னிக்கு நாம பட்டினியா கிடந்தாத்தான் என்ன! என்று இவன் பச்சாதாபத்தில் வெறும் கையோடு வீட்டிற்கு வந்தால் போச்சு! அன்றே மனித வரலாறுக்கு முற்றுப்புள்ளி விழுந்திருக்கும்! ஆக, முக ஜாடையை உணரும் மையமும் அவுட்.
இது போக டெஸ்டோஸ்டீரான் இன்னொரு பெரிய மாற்றத்தையும் மனித மூளையில் ஏற்படுத்தியது. அது ஆணை விடாமுயற்சி கொண்டவனாக்கியது... தொடர்ந்து ஒரே விஷயத்தில் குறியாய் இருந்து தன் இலக்கை எட்டும் வரை அயராதிருக்க வைத்தது.
ஆனால் இதிலும் ஒரு சிக்கல்.. அவன் என்னதான் முயன்று தொடர்ந்து குறி வைத்தும், கடைசி நேரத்தில் இரை டிமிக்கி கொடுத்து ஓடிவிட்டால், அந்தத் தோல்வி இவனை `சை!' என்று சலிப்புற செய்யும். இவ்வளவு கஷ்டப்பட்டும் பலனில்லையே என்று சோர்ந்துபோய், தன்னம்பிக்கை இழந்து வேட்டைக்கே ஒரு முழுக்குப் போட்டுவிட்டால் அவன் தோல்வி மனப்பான்மை மனித இனத்தை நிர்மூலமாக்கிவிடும்.
வேட்டையில் வெற்றி பெறாவிட்டாலும் அவனை உற்சாகம் குறையாமலிருக்க வைப்பதுதானே மரபணு ரீதியாகப் பயனளிக்கும். அதனால் டெஸ்டோஸ்டீரான் ஆணின் மூளையிலுள்ள இன்ப மையத்தை மாற்றி அமைத்து, ஒவ்வொரு வேட்டையும் சந்தோஷம். அதன் வெற்றி தோல்வி இரண்டாம் பட்சம் என்ற உணர்வை ஏற்படுத்தியது.
அளவிற்கு மிஞ்சினால் அமுதமே நஞ்சாகும்போது, டெஸ்டோஸ்டீரான் மட்டும் விதிவிலக்கா என்ன? டெஸ்டோஸ்டீரான் சுரப்பு அதிகரிக்க அதிகரிக்க அதன் பக்க விளைவுகள் பல தலை தூக்க ஆரம்பித்தன.
அது ஆண்களை எதிலும் முந்திச் செல்லத் தூண்டியது. காரணம், மற்ற ஆண்களை விட முந்தியிருக்கும் `ஆல்ஃபா ஆணை'த்தானே எல்லா பெண்களும் விரும்புகிறார்கள். அதனால் எடுத்த காரியம் எதுவாக இருந்தாலும், பிற ஆண்களை விட தான் பெரியவன் என்று காட்டிக்கொண்டே ஆக வேண்டும் என்ற உத்வேகமும் ஆண்களுக்கு அதிகமாய் இருந்தது. போகப் போக, இந்த `நான் தான் உசத்தியாக்கும்' என்கிறா போக்கே ஆண்களை ஆதிக்க மனப்பான்மை கொள்ள வைத்தும் விட, உலகிலேயே தான் ஒருவன் தான் சூப்பர், மற்றவை அனைத்தும் மட்டம் என்ற எண்ணம் தலைதூக்க, மற்ற எல்லாவற்றையும்' தன் ஆதிக்கத்திற்குள் கொண்டுவர பெரிதும் போராடினான் ஆண். இதில் ஒரு சிக்கல் என்னவென்றால் இந்த `மற்ற எல்லாவற்றையும் என்ற பட்டியலில் மனிதப் பெண்ணும் அடங்கிப் போய்விட்டாள். அதனால் அவளையும் அடக்கி ஆள்வது தன்னுடைய பிறப்புரிமை என்றே நினைக்க ஆரம்பித்துவிட்டான் ஆண். ஓவர் டெஸ்டோஸ்டீரான் சுரத்தல் அவனை முன்கோபியாய், முரடனாய், மூர்க்கனாய் மாற்றியது. பதவி ஆசை, பெண்ணாசை, போர் வெறி, வன்முறை என்று ஆண் தடம் புரள, இதற்கெல்லாம் பெண்ணும் பலியாக ஆரம்பித்தாள்.
ஆக, ஆணைத் தன்னுடைய ஆயுதமாக பயன்படுத்தவே பெண் அவனுக்குள் அதிகபட்ச டெஸ்டோஸ்டீரானை சுரக்கச் செய்தாள். ஆனால் காலப் போக்கில் இந்த டெஸ்டோஸ்டீரானே ஆண் - பெண் வித்தியாசங்களை ஊதி ஊதிப் பெரிதாக்கி, இன்றைய தேதியில், இந்த இரு பாலினரும் ஒருவருக்கு மற்றவர் புரியாத புதிராகவே போய்விட்டார்கள். ஆனால் உற்றுப் பார்த்தால் தெரியும் ஆணின் இந்த எல்லா வித்தியாசங்களுக்கும் காரணம் ஆண்கள் அல்ல, பெண்களே!
இதெல்லாம் படிக்க சுவாரசியமாய் இருந்தாலும், பெண்ணின் கை மீறிப் போய்க் கொண்டிருக்கும் இந்த ஆண்களை மறுபடியும் பெண்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது எப்படி? சும்மா இருந்த ஆணை பயங்கரவாதியாக்கிவிட்டாளே பெண், இனி அவனை எப்படி ஹேண்டில் செய்து அமைதியை நிலைநாட்டுவாள்?
இயற்கையில் பெண் என்பவள் ரொம்ப பெரிய பொக்கிஷம். ஏன் தெரியுமா? பெண்ணிடம் தான் ஜனத்தொகையைப் பெருக்கும் பெரும் ஆற்றல் இருக்கிறது. ஜனத்தொகையை மட்டுமே பெருக்கிக் கொண்டு இருப்பதா ஒரு பெண்ணின் வேலை? பெண் என்ன பிள்ளை பெறுகிற யந்திரமா? என்று நீங்கள் ஆட்சேபித்தால், வெயிட் வெயிட். நாமெல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நூற்றாண்டில் வேண்டுமானால் மனித ஜனத்தொகை ஓவராய் இருப்பதினால், தாமத திருமணம், கருத்தடைச் சாதனம், பிள்ளை பிறப்பை சுயமாகக் குறைத்துக் கொள்ளும் போக்கு, கருக்கலைப்பு முறைகள், குடும்பக் கட்டுப்பாட்டு திட்டம் என்று நாம் தீவிர ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறோம். ஆனால் மனிதர்கள் தோன்றிய மூன்று மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னிருந்த காலத்தில் மிக மிகக் குறைந்த எண்ணிக்கையில் வாழ்ந்த ஒரு சிறுபான்மை உயிரினம் மனிதர்கள் மட்டுமே. அந்த கால கட்ட ஜீவனத்தில் பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதம் தான் அதிகம் என்பதால், குழந்தைகளைப் பெற்றுத் தரவல்ல பெண் மிகப் பெரிய பொக்கிஷமாகவே கருதப்பட்டாள்.
பெண்கள் பாதுகாப்பாய் சவுக்கியமாய் இல்லை என்றால் ஒட்டுமொத்த உயிரினமே அழிந்து போய்விடுமே என்றுதான், பெண்களைப் பாதுகாக்கவென்றே இயற்கை ஆண்களைப் படைத்தது. உங்களுக்கு ஒன்று தெரியுமா? உலகத்தில் உயிர்கள் முதல் முதலில் தோன்றிய காலத்தில் ஆண் என்ற பாலினமே இருக்கவில்லை! எல்லா உயிர்களுமே ஆரம்பத்தில் பெண்பாலாக மட்டுமே இருந்தன. அவ்வளவு ஏன்? இன்று வரை பூமியில் மிக அதிக எண்ணிக்கையில் வாழும் வைரஸ், பாக்டீரியா, ஆல்கே, அமீபா மாதிரியான நுண்ணுயிர்களில் ஆண் பால் என்ற இனமே இல்லை... எல்லாமே ஒன்லி விமென்! ஏன் என்றால் இந்த உயிர்களுக்கு ஆணின் தேவை இல்லை! எந்தெந்த உயிர்களில் எல்லாம் பிற கிருமிகள் அல்லது வேறு உயிரினம் தாக்கும் ஆபத்து அதிகமாக உள்ளதோ அந்தந்த உயிர்களில் மட்டும் தான் ஆண் என்கிற ஒரு தனி பாலினம் இருக்கிறது.
மனிதர்களிலும் ஆணின் கடமை, பெண்ணைப் பாதுகாப்பதுதான். அதனால் தான் எரியும் விமானம், மூழ்கும் டைடானிக் கப்பல் ஆகிய செயற்கை விபத்துக்கள் ஆகட்டும், சுனாமி, நிலநடுக்கம், புயல் வெள்ளம் என்ற இயற்கைச் சீற்றங்கள் ஆகட்டும்... எங்கு ஆபத்து நேர்ந்தாலும் முதலில் காப்பாற்றப்படுவது பெண்ணினம் தான்.
இந்தக் காலத்தில் பெண்களைப் பாதுகாப்பது அவ்வளவொன்றும் கஷ்டமில்லை. சமுதாயம், சட்டம், போலீஸ், மகளிர் ஆணையம் என்று பல கட்டமைப்புகள் இருப்பதால் பெண்களுக்கு நிறையவே பாதுகாப்பு உள்ளது. ஆனால் மனிதர்கள் தோன்றிய காலத்தில், இந்த ஏற்பாடுகள் இருக்கவில்லை. பிற மிருகம் தாக்கிவிடும் அபாயம் எந்நேரமும் இருந்த அந்த ஆரண்ய காண்ட வாழ்க்கை முறையில் ஒரு பெண்ணைப் பாதுகாக்க வேண்டும் என்றால் சும்மா சாதாரண நபரால் அது முடியாதே. அதுவும் ஆயுதங்கள் எதுவும் கண்டுபிடிக்காத காலத்தில் பெண்ணைக் காப்பாற்ற வேண்டுமென்றால், அதிக பட்ச வீரமும், அதைவிட அதிகமான தேகபலமும் கொண்டவனால் மட்டும்தான் முடியும்.
இந்த அதிகபட்ச வீரமும் தேக பலமும் தானாய் தோன்றிவிடாதே! அதை உருவாக்க டெஸ்டோஸ்டீரான் என்கிற தேகபலம் கூட்டும் ஹார்மோன் தேவைப்படுமே. இன்று ஒலிம்பிக்ஸ் மாதிரியான போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்கள் ஜெயித்தே ஆகவேண்டும் என்ற வேட்கையில் டெஸ்டோஸ்டீரான் மாதிரியான ஹார்மோன்களை ஊசி, மாத்திரை என்று செயற்கையாக உடம்பில் ஏற்றி, திடகாத்திரமான உடலைப் பெற முயல்கிறார்கள். அந்தக் கால காட்டு வாழ்க்கையில் ஆண் இப்படிச் செய்யவெல்லாம் வாய்ப்பே இல்லை. அவனே சுயமாகப் போராடி, தன் உடம்பை வளைத்து நிஜ டெஸ்டோஸ்டீரானை சுரந்தாக வேண்டும். அப்போதுதான் ஆபத்துகளுடன் மோதி, அயராமல் தன் துணைவியையும், பிள்ளைகளையும் அவன் காப்பாற்ற முடியும்.
ஆண்கள் இப்படி டெஸ்டோஸ்டீரான் உற்பத்தியை அதிகரிக்கும் நிர்பந்தத்திற்கு தள்ளப்பட, பெண்கள் தங்களது பாதுகாப்பு கருதி, அதிக பட்ச டெஸ்டோடீரான் சுரத்தலை வெளிப்படுத்தும் ஆண்களோடு மட்டுமே கூட விரும்பினார்கள். அதற்கும் ஒரு காரணம் இருந்தது. இவள் பாட்டுக்கு ஒரு சோப்ளாங்கிக்கு பாவம் பார்த்து அவனோடு கூடி, பிள்ளை பெற்றாள் என்று வையுங்களேன். ஆபத்து காலத்தில் சோப்ளாங்கி, தைரியமாகப் போய் போராடி, மனைவி மக்களைக் காப்பாற்றிடாமல், பயந்து போய் எல்லாப் பொறுப்பையும் மனைவியின் தலையில் கட்டிவிட்டு எங்கோ ஓடி ஒளிந்துகொண்டால் பிறகு அவளுக்குத் தானே எல்லா கஷ்டமும்? இந்த துர்பாக்கியம் எல்லாம் நேர்ந்துவிடக் கூடாதென்று தான் பெண்கள் எல்லோரும் மிக உஷாராக போதுமான டெஸ்டோஸ்டீரான் சுரத்தலை நிரூபிக்கும் ஆண்களோடு மட்டுமே கூட முயல்கிறார்கள்.
அவதார புருஷன் ராமனாகவே இருந்தாலும் வில்லை வளைத்தால் தான் சீதை என்று கட்டளைவிதித்தது கூட ராமனின் டெஸ்டோஸ்டீரான் அளவைச் சோதிக்கும் ஒரு நேரடி முயற்சியே! ஆக அந்தக் காலப் பெண்கள் எல்லாம் பார்த்துப் பார்த்து அதிக பட்ச டெஸ்டோஸ்டீரான் சுரந்த ஆண்களை மட்டும் ஜலித்து எடுத்து உறவுகொண்டதால், ஆண்வர்க்கம் போகப் போக அதிக அளவு டெஸ்டோஸ்டீரான் கொண்டவர்களாக மாறினார்கள். ஒரு நாள் இரண்டு நாட்களுக்கு அல்ல, முழுவதாய் மூன்று மில்லியன் ஆண்டுகளுக்கு ஆண்கள் இப்படி அதிக டெஸ்டோஸ்டீரான், இன்னும் அதிக டெஸ்டோஸ்டீரான் என்று சுரந்துகொண்டே போனதில், ஆண்கள் அதிக தசைப் புடைப்பு, அதிக ரத்த அணுக்கள், அதிக நுரையீரல் கொள் அளவு, அதிக வலி தாங்கும் தன்மை, அஞ்சாத நெஞ்சம் என்று பல அனுகூலங்களைப் பெற்றார்கள்.
இந்த அதிகபட்ச டெஸ்டோஸ்டீரான் ஆணின் உடம்பை பல விதங்களில் மாற்றி அமைத்ததைப் போலவே அவனது மனதையும் மாற்றியது. அடிப்படை பெண் வடிவ மூளையில் மொழி மையம் பெரிது. கை ஜாடை, முக அசைவு போன்றவற்றை அறியும் மையங்கள் அதிகம். ஆணுக்கோ வேட்டையாடும் திறனை அதிகரிக்கும் ஆற்றல்கள் அதிகம் தேவை. ஓடும் இரையைத் துல்லியமாய் தேடிப் பிடித்து, அதன் வேகம், தன்னை விடவும் எவ்வளவு தூரம் என்பதையும் கணித்துக் குறிதவறாமல் ஆயுதத்தை எறிந்து, வேட்டையில் வெற்றி பெறத் தேவையான இந்த திறமையைத் தான் visuo spatial ஆற்றல் என்போம். அதாவது கண், கை அசைவு, தூரம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து செயல்படும் திறன்.
இந்தத் திறனெல்லாம் மனித இனத்திற்கு ஆரம்பத்திலிருந்தே இருக்கவில்லை. மனிதர்கள் பூச்சி உண்ணும் தாவர பட்சிணி வகையைச் சேர்ந்தவர்கள். பெரும் பனி யுகத்தில் கஷ்ட ஜீவனத்தை வெல்ல வேறு வழியில்லாமல் மாமிச பட்சிணி வாழ்க்கை முறைக்கு மாறியவர்கள். அடிப்படையில் பூச்சி தின்னிகள் என்பதால் வேட்டைக்கு உதவாத ஒரு சாதா மூளைதான் ஆரம்பகால மனிதர்களுக்கு இருந்தது. மனித மரபணுக்கள் துரிதமாக செயல்பட்டு, மனித இனத்தைக் காப்பாற்ற புதிதாய் ஒரு சூப்பர் வேட்டை மூளையை உருவாக்க வேண்டியிருந்தது.
ஆனால் தாவர பட்சிணி மூளையை, மாமிச பட்சிணி மூளை ஆக்குவது அவ்வளவு சுலபமில்லையே! மூளையின் அளவு கொஞ்சம்தான். அதை ரொம்பவும் பெரிதாக்க முடியாது. அப்புறம் பிரசவத்தின்போது சிசுவின் தலை, இடை எலும்பிலேயே மாட்டிக் கொள்ளுமே! தலையும் பெரிதாக வேண்டும், பெண்ணின் மெல்லிடையை விட்டுப் பிரசவித்து வெளியேறத் தோதாகவும் இருக்க வேண்டும் என்றால் அது எப்படி சாத்தியமாகும்? அதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தன மரபணுக்கள். தலையைக் கொஞ்சம் பெரிதாக்கி, இடையைக் கொஞ்சம் அகலமாக்கி, மூளையில் இருந்த அநாவசிய மையங்களைக் காலிசெய்து வெற்றிடங்களை வாழ்க்கைக்குத் தேவையான வித்தைகளை வைத்து நிரப்பின.
அதனால் ஆண்கள் முக்கால்வாசி மொழி மையத்தை இழந்தார்கள். கூடவே கை ஜாடை, முக ஜாடை அறியும் மையங்களும் காலியாகின. எப்படியும் ஒரு ஆணுக்கு இந்தச் செயல்பாடுகள் தேவைப்படவில்லை. ஒரு நல்ல வேட்டுவன் மௌனமகத்தானே இருந்தாக வேண்டும். பேசிக்கொண்டே இருந்தால் மிருகமல்லவா அவனை வேட்டையாடிவிடும்! கை இருக்கிறதே என்று இவன் விஸ்தாரமாய் ஜாடை செய்து நண்பர்களோடு உரையாடினாலோ, அசைவைக் கவனித்ததுமே மிருகங்கள் உஷாராகி ஓடிவிடும். அதோடு, `நான் பாவமில்லையா! என்னை விட்டுடேன்! என்று ஏதாவது மிருகம் பரிதாபமாய் அவனைப் பார்த்தால், `போனா போகட்டும், இன்னிக்கு நாம பட்டினியா கிடந்தாத்தான் என்ன! என்று இவன் பச்சாதாபத்தில் வெறும் கையோடு வீட்டிற்கு வந்தால் போச்சு! அன்றே மனித வரலாறுக்கு முற்றுப்புள்ளி விழுந்திருக்கும்! ஆக, முக ஜாடையை உணரும் மையமும் அவுட்.
இது போக டெஸ்டோஸ்டீரான் இன்னொரு பெரிய மாற்றத்தையும் மனித மூளையில் ஏற்படுத்தியது. அது ஆணை விடாமுயற்சி கொண்டவனாக்கியது... தொடர்ந்து ஒரே விஷயத்தில் குறியாய் இருந்து தன் இலக்கை எட்டும் வரை அயராதிருக்க வைத்தது.
ஆனால் இதிலும் ஒரு சிக்கல்.. அவன் என்னதான் முயன்று தொடர்ந்து குறி வைத்தும், கடைசி நேரத்தில் இரை டிமிக்கி கொடுத்து ஓடிவிட்டால், அந்தத் தோல்வி இவனை `சை!' என்று சலிப்புற செய்யும். இவ்வளவு கஷ்டப்பட்டும் பலனில்லையே என்று சோர்ந்துபோய், தன்னம்பிக்கை இழந்து வேட்டைக்கே ஒரு முழுக்குப் போட்டுவிட்டால் அவன் தோல்வி மனப்பான்மை மனித இனத்தை நிர்மூலமாக்கிவிடும்.
வேட்டையில் வெற்றி பெறாவிட்டாலும் அவனை உற்சாகம் குறையாமலிருக்க வைப்பதுதானே மரபணு ரீதியாகப் பயனளிக்கும். அதனால் டெஸ்டோஸ்டீரான் ஆணின் மூளையிலுள்ள இன்ப மையத்தை மாற்றி அமைத்து, ஒவ்வொரு வேட்டையும் சந்தோஷம். அதன் வெற்றி தோல்வி இரண்டாம் பட்சம் என்ற உணர்வை ஏற்படுத்தியது.
அளவிற்கு மிஞ்சினால் அமுதமே நஞ்சாகும்போது, டெஸ்டோஸ்டீரான் மட்டும் விதிவிலக்கா என்ன? டெஸ்டோஸ்டீரான் சுரப்பு அதிகரிக்க அதிகரிக்க அதன் பக்க விளைவுகள் பல தலை தூக்க ஆரம்பித்தன.
அது ஆண்களை எதிலும் முந்திச் செல்லத் தூண்டியது. காரணம், மற்ற ஆண்களை விட முந்தியிருக்கும் `ஆல்ஃபா ஆணை'த்தானே எல்லா பெண்களும் விரும்புகிறார்கள். அதனால் எடுத்த காரியம் எதுவாக இருந்தாலும், பிற ஆண்களை விட தான் பெரியவன் என்று காட்டிக்கொண்டே ஆக வேண்டும் என்ற உத்வேகமும் ஆண்களுக்கு அதிகமாய் இருந்தது. போகப் போக, இந்த `நான் தான் உசத்தியாக்கும்' என்கிறா போக்கே ஆண்களை ஆதிக்க மனப்பான்மை கொள்ள வைத்தும் விட, உலகிலேயே தான் ஒருவன் தான் சூப்பர், மற்றவை அனைத்தும் மட்டம் என்ற எண்ணம் தலைதூக்க, மற்ற எல்லாவற்றையும்' தன் ஆதிக்கத்திற்குள் கொண்டுவர பெரிதும் போராடினான் ஆண். இதில் ஒரு சிக்கல் என்னவென்றால் இந்த `மற்ற எல்லாவற்றையும் என்ற பட்டியலில் மனிதப் பெண்ணும் அடங்கிப் போய்விட்டாள். அதனால் அவளையும் அடக்கி ஆள்வது தன்னுடைய பிறப்புரிமை என்றே நினைக்க ஆரம்பித்துவிட்டான் ஆண். ஓவர் டெஸ்டோஸ்டீரான் சுரத்தல் அவனை முன்கோபியாய், முரடனாய், மூர்க்கனாய் மாற்றியது. பதவி ஆசை, பெண்ணாசை, போர் வெறி, வன்முறை என்று ஆண் தடம் புரள, இதற்கெல்லாம் பெண்ணும் பலியாக ஆரம்பித்தாள்.
ஆக, ஆணைத் தன்னுடைய ஆயுதமாக பயன்படுத்தவே பெண் அவனுக்குள் அதிகபட்ச டெஸ்டோஸ்டீரானை சுரக்கச் செய்தாள். ஆனால் காலப் போக்கில் இந்த டெஸ்டோஸ்டீரானே ஆண் - பெண் வித்தியாசங்களை ஊதி ஊதிப் பெரிதாக்கி, இன்றைய தேதியில், இந்த இரு பாலினரும் ஒருவருக்கு மற்றவர் புரியாத புதிராகவே போய்விட்டார்கள். ஆனால் உற்றுப் பார்த்தால் தெரியும் ஆணின் இந்த எல்லா வித்தியாசங்களுக்கும் காரணம் ஆண்கள் அல்ல, பெண்களே!
இதெல்லாம் படிக்க சுவாரசியமாய் இருந்தாலும், பெண்ணின் கை மீறிப் போய்க் கொண்டிருக்கும் இந்த ஆண்களை மறுபடியும் பெண்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது எப்படி? சும்மா இருந்த ஆணை பயங்கரவாதியாக்கிவிட்டாளே பெண், இனி அவனை எப்படி ஹேண்டில் செய்து அமைதியை நிலைநாட்டுவாள்?
No comments:
Post a Comment